Othaiyadi Pathayila
by Dhibu Ninan Thomas, Anirudh Ravichander, Arunraja Kamaraj
Music : Dhibu Ninan Thomas Lyrics : Arunraja Kamaraj ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா கண்மணியே... வழியில பூத்த சாமந்தி நீயே விழியிலே சேத்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் தேரழகே நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் ~ இசை ~ பலமுறை நீயும் பாக்காம போன இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சுந்தரி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே... கொஞ்சிடவே...
Share these lyrics